Header Ads Widget

Responsive Advertisement

Urugayo nenjamae | உருகாயோ நெஞ்சமே?... ‍கல்வாரி பாடல்வரிசை Kalvari songs Video & Lyrics


உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோபார்
கரங்கால்கள் ஆணியேறித்
திருமேனி நையுதே



மன்னுயிர்க்காய் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனார்
இந்நில மெல்லாம் புரக்க
ஈனக்குரு சேறினார்!


தாகம் மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே
ஏகபரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்! 


வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்!
புல்லரிதோ நன்றி கெட்டு
புறம்பாக்கினாரன்றோ!

Post a Comment

0 Comments