Header Ads Widget

Responsive Advertisement

எண்ணிக்கையும்! எண்ணங்களும்! கவிதை



பரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு
பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு
பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும்
வானவரைப் பார்க்க வெட்டவெளிக்கு விரைந்தோடும்
கால்களின் எண்ணிக்கை பெருத்துவிட்டது- அவர்களின்
எண்ணங்களும் கறுத்துவிட்டது! - ரோமர் 1:21


சிந்திக்கேயாளின் சிந்தை மாறிவிட்டது - ஏனோ
எயோதியாளின் சிந்தையும் மாற்றம் கண்டுவிட்டது
பரிசுத்தப் பவுலடியாரின் கண்கள் இதைக் கண்டுவிட்டது
பரிசுத்தவானின் செவிகள் இதைக் கேட்டுவிட்டது - இதனால்
கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்கவேண்டும் என்ற
கட்டளையும் பிறந்துவிட்டது! - பிலிப்பியர் 4:1,2


சிந்தையைச் சில காலம் அடகு வைத்துவிட்டு
தேவனுடைய மந்தையை மறந்துவிட்டு - வாழும்
மக்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது
சிறைச்சாலைக்குள்ளே பவுலுக்கும் சீலாவுக்கும் இருந்த சிந்தை - அப். 16:25
சபைக்குள்ளே இருக்கிறவர்களிடம் இல்லையே என்ற கவலை
பரிசுத்தவான்களுக்குப் பெருகிவிட்டது  

                                                
பெற்றுக்கொள்ளும் சிந்தை பெருகிவிட்டது
கற்றுக்கொள்ளும் சிந்தை குறைந்துவிட்டது - இதனால்
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களின்   - மத்தேயு 11:28
எண்ணிக்கை பெருகிவிட்டது
தலைகளை எண்ணும் உலகம் மனித வருத்தங்களை
எண்ணுவதற்குத் தவறிவிட்டது


என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் - மத்தேயு 11:29
என்றவரின் முகத்தைப் பார்க்க விரும்பாத மக்களின்
எண்ணிக்கை பெருகிவிட்டது -இதனால்
இளைப்பாறுதலைப் பெறுவதற்குப் பதிலாக - ஆத்துமாக்களில்
இளைப்பைப் பெற்றுக்கொள்கிறவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது! - சங்.106:15


இத்தனைக்கும் நடுவே
இறை மக்கள்
இறை வார்த்தையை
இரையைப் பார்க்கிலும் மேலானதாக உண்டு
சிந்தனையில் பதியம் போட்டுக்கொண்டு
பரிசுத்த வேதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு
பரிசுத்த தேவனை நோக்கி ஜெபித்துக்கொண்டு
பாரஞ்சுமந்து தவித்தாலும் போர்வையைக் (ஜீவனை)
களைந்துபோட வேண்டும் என்று விரும்பாமல் -2 கொரி.5:4


எலியாவைப் போல
போதும் கர்த்தாவே என்று புலம்பாமல்
இயேசுவைப் போல
என் சித்தமல்ல உம் சித்தம் தேவா
உம் சித்தம் செய்ய இதோ என்னை அப்படியே தத்தம் செய்கிறேன்
ஏற்றுக்கொள்ளும் - என்று சொல்லி
மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காக
போர்வை தரித்தவர்களாயிருக்க விரும்புகிற கூட்டம் பெருத்துவிட்டது
 

தரிசித்து நடக்க மறுத்து - சாத்ராக் மேஷாக், ஆபேத்நேகோ போல
விசுவாசித்து நடக்கிற பரிசுத்த கால்களின் எண்ணிக்கை பெருத்துவிட்டது - அவர்களின்
எண்ணங்களில் மகிமையான சுவிசே­த்தின் வெளிச்சம் பெருகிவிட்டது
                                                                                                                                     - அல்லேலூயா

Post a Comment

0 Comments